நாகை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக நாம் தமிழர் கட்சியினர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து வருவது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக நாகை மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு விலகுவதாக அறிவித்திருப்பது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இப்படி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியில் இருந்து விலகுபவர்கள் அனைவருமே பெரும்பாலும் கட்சி துவங்கியதில் இருந்து முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் என்பதும், தீவிரமாக இயங்கி, கட்சி பணியாற்றி வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 11 முக்கிய பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என கூறி கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறி வருவது அக்கட்சியில் தலைவர் சீமானை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்நிலையில் நாகை தொகுதி பொருளாளர் நாகராஜன், செய்தி தொடர்பாளர் அகமது, இளைஞரணி செயலாளர் பிரவின் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 50க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.