தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள மரத்தை மர்ம நபர்கள் இரவோடு இரவாக வெட்டி அழித்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சங்கரன்கோயில் பகுதிகளில் இதுபோன்று மரங்களை வெட்டி கடத்துவது அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.