அரசுப்பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருக்கும் தினத்தில், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள மிகப்பெரிய வர்த்தக மையமான கோட்டாறு பகுதிகளில,பாஜகவின் மாவட்ட பொருளாளரும், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினருமான முத்துராமன் தலைமையில் பாஜகவின் பல்வேறு பிரிவுகளை சார்ந்த, ஆண், பெண்கள் பெரும் திரளாக செண்டை மேளம் முழங்க சாலைகளிலும், வீடு,வீடாக சென்று, கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணனுக்கு 'தாமரை''சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். கடுமையான வெயிலின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல். தாமரைக்கு வாக்கு சேகரிப்பு பணியில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.