கன்னியாகுமரியில், வே. சுரேந்திரன்
மக்களாட்சி பாதுகாப்போம் தேசிய பிரச்சார இயக்கத்தை நாடு முழுவதும் நடத்துவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது என்றார்..
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான பிரச்சாரத்தை இம்மாதம் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியாக இம்மாதம் 26ஆம் தேதி நாகர்கோவிலில் இதன் துவக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு திட்டமிட்டு தற்போதைய ஆளும் ஒன்றிய அரசு மறைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் இவர்கள் மறக்க நினைக்கும் வரலாறுகளை இந்திய தேசம் என்றும் கொண்டு சேர்க்கவும் சுதந்திர இந்தியாவின் மாண்புகளை பேணிப் பாதுகாப்பதும் இந்த பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும். இந்த நாட்டில் சொந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லை சொந்த நாட்டிலேயே நாட்டு மக்களை இனப்படுகொலை செய்யும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இது மக்கள் ஆட்சியா அல்லது பாசிச ஆட்சியா என்ற நிலை உள்ளது. கலவரம் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடராமல் அதனால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்லும் சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பாலியல் வன்முறை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை . அவர்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது. அரசியல் சாசன சட்டத்தை ஒழிக்கும் நிலையில் இன்று ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த மக்களாட்சி பாதுகாப்போம் என்ற பிரசார இயக்கத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னெடுத்துள்ளது, என்றார்..
இந்த பேட்டியின் போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், மாநிலச் செயலாளர் முஹம்மது ரசின், நெல்லை மண்டல தலைவர் திப்புசுல்தான், குமரி மாவட்ட தலைவர் முகமது ஜிஸ்தி, அப்துல் சத்தார் ஆகியோர் உடனிருந்தனர்
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]