• Fri. Mar 29th, 2024

சாலையில் பறந்த பணம்.. அள்ளிச் சென்ற மக்கள்…

Byமதி

Nov 22, 2021

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் பணம், டிரக் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென் டிரக்கின் கதவு திறந்து கொள்ள, சாலையில் பணம் பறக்க துவங்கியது. இதனை கண்ட வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை நிறுத்தி, பணத்தை அள்ளத் துவங்கினர். இதனால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பணத்தை எடுத்தவர்கள் திரும்ப தர வேண்டும் என அந்த வங்கி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த சாலையில் சென்ற வாகனங்களின் பதிவெண்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலர் நேர்மையாக முன்வந்து பணத்தை ஒப்படைத்துள்ளனர். அஜாக்கிரதையாக செயல்பட்ட டிரக் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *