வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடவலியுறுத்தி வருவதாக இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியும் ,உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தில் நின்று போட்டியிட வேண்டும் என இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர் ” இருவரும் போட்டியிடுவதற்கு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அப்போதுதான் 40 தொகுதிகளும் பாஜக வசம் வரும்.தமிழகமும் வளரும். எனதெரிவித்துள்ளார். அப்படிபோட்டியிட்டால் பாஜக வலுவாக இருக்கும் கோவை,குமரி அல்லது மதுரையில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.