• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்

ByA.Tamilselvan

Oct 19, 2022

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆணைய அறிக்கைபடி இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடி துப்பாக்கச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவித்துள்ளார். தூப்பாக்கச்சூடு ஆணைய அறிக்கையில் எடப்பாடியிடம் காவல்துறையின் உயர் அலுவலர்கள் ஒவ்வொரு நிமிடமும் துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் தெரிவித்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் தூப்பாக்கிச்சூடு சம்பந்தமான தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் பேசினார்கள்.அப்போது முன்னாள் முதல்வர் இபிஎஸ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைகட்சி, மமக, மதிமுக,உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.