மிக்ஜாம் புயலால் பெய்துள்ள கனமழையால், சென்னை கோட்டூர்புரம் சூர்யா நகர், சித்ரா நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டு, நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தோம். அவர்கள் முன்வைத்த தேவைகளை பூர்த்தி செய்ய அங்குள்ள அதிகாரிகளை கேட்டுக் கொண்டோம்.
மேலும் முகாம்களில் உள்ள மக்கள் கூடிய விரைவில் வீடு திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள், அலுவலர்களை வலியுறுத்தினோம் என்று அமைச்சர் உதயநிதி X ல் கூறி இருக்கிறார்.