மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்து கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன் பட்டி அம்மச்சியாபுரம் கணேசபுரம் மேல் நாச்சிகுளம் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு தனியார் மினி பேருந்து சேவை மீண்டும் துவக்கப்பட்டது

இந்த பகுதியில் பேருந்துகள் இல்லாததால் கருப்பட்டி கரட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் நடந்து சென்று தாங்கல் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சென்று வந்தனர் மேலும் தங்கள் பகுதிக்கு பேருந்து சேவை ஏற்படுத்தி தர வேண்டும் என அரசுக்கும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த மதுசூதனன் என்ற தனியார் மினி பேருந்து இந்த பகுதிக்கு சென்று வந்தது.
கடந்த சில தினங்களாக நிர்வாக காரணங்களால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது இதனால் பேருந்து இல்லாத நிலையில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று முதல் இந்த தனியார் மினி பேருந்து சேவையானது மீண்டும் துவக்கப்பட்டது. இந்த பேருந்தானது வாடிப்பட்டியில் இருந்து மாதா கோவில் வாடிப்பட்டி ரயில் நிலையம் பகுதி கரட்டுப்பட்டி விளக்கு மேல் நாச்சிகுளம் பொம்மன் பட்டி அம்மச்சியாபுரம் கணேசபுரம் வழியாக கருப்பட்டிக்கு சென்று அதே வழியாக மீண்டும் வாடிப்பட்டிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்ட கிராமப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மினி பேருந்து சேவையாவது தங்களுக்கு கிடைத்தது என மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளி செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்து சேவைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.








