அருணாச்சல பிரதேச மாநிலம் சியாங் பகுதியில் ராணுவ தலைமையகத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வழக்கம் போல் ரோந்து பணிக்குசென்றுள்ளது. மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொருங்கியது.தகவலறிந்து அந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில் எத்தனை வீரர்கள் சென்றனர்.? அவர்கள்கதி என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.