

அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன் (Alexander Alexandrovich Friedmann) ஜூன் 17, 1888ல் இசை, நடனக் கலைஞரான அலெக்சாந்தர் பிரீடுமேனுக்கும் பியானோ கலைஞர் உலூத்மிலா இக்னத்தியேவ்னா வொயாச்செக் என்பவருக்கும் புனித பீட்டர்சுபேர்கு நகரில் பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோதே உருசிய மரபுவழி மாதாக்கோயிலில் திருமுழுக்கு செய்விக்கப்பட்டுள்ளார். வாழ்நாளின் பெரும் பகுதியைப் புனித பீட்டர்சுபர்கில் கழித்துள்ளார். இவர் புனித பீட்டர் சுபர்க் அரசு பல்கலைக்கழகத்தில் பயின்று 1910ல் பட்டம் பெற்றார். பிறகு புனித பீட்டர்சுபர்க் சுரங்க கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். பிரீடுமேன் பள்ளியில் இருந்தே யாக்கோபு தமார்க்கின் என்பவருடன் இணைபிரியா நட்போடு இருந்தார். பின்னாட்களில் இந்த யாக்கோபு தமார்க்கின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பெயர்பெற்ற கணிதவியலாரில் ஒருவரானார்.

பிரீடுமேன் உருசியப் பேரரசுக்காக வான்படை வீரராகவும், பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். முதல் உலகப் போரின் போது உருசியா சார்பில் சண்டையிட்டார். உருசியப் புரட்சிக்குப் பிறகு வானூர்திக் குழுமத்தின் தலைவர் ஆனார். பிரீடுமேன் 1918ல் பெர்ம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார். 1922ல் விரிவடையும் அண்டம் என்ற எண்ணக்கருவை அறிமுகப்படுத்தினார். பின்னர் 1927ல் பெல்ஜிய வானியலாளர் ஜார்ஜசு இலெமைத்ரேயும் தனித்து தானும் இதே கண்ணோட்டத்துக்கு வந்துள்ளனர். 1925ஜூனில் இலெனின்கிராதில் இருந்த முதன்மை புவியியற்பியல் காணகத்துக்கு இயக்குநராக அமர்த்தப்பட்டுள்ளார். 1925 ஜூலையில் ஒரு வளிமக்கலன் ஆய்வில் பங்கேற்று 7400 மீ (24,300 அடி) உயரத்தில் இருந்து புவி குறித்த நோக்கீடுகளை எடுத்து வரலாறு காணாத புதிய பதிவை உருவாக்கியுள்ளார்.

அவார்டு பெர்சி இராபெர்ட்சனும், ஆர்தர் ஜெப்ரி வாக்கரும் தம் ஆய்வுகளை வெளியிடுவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே,”மாறாத எதிர்வளைமை உள்ள வெளியமைந்த உலகத்துக்கான வாய்ப்புகள்” என்ற ஆய்வுட்பட்ட பிரீடுமேனின் ஆய்வுகள் செருமானிய இதழில் 1925 ஜூன் திங்களில் வெளியிடப்பட்டமை, அவர் புடவி சார்ந்த நேர், சுழி, எதிர் வளைமைப் படிமங்கள் குறித்த புரிதலைக் கைவரப் பெற்றிருந்தமைக்கான செயல்விளக்கமாக அமைந்தது. இந்தப் பொதுச் சார்பியலுக்கான அண்ட இயங்கியல் படிமங்கள் பெரு வெடிப்புக் கோட்பாடு, நிலைத்த நிலைக் கோட்பாடு ஆகிய இரண்டு கோட்பாடுகளுக்கும் தேவைப்பட்ட செந்தர வடிவங்களாகும். இவரது பணி இருகோட்பாடுகளையும் சமமாகத் தாங்கிப்பிடித்தது. இருந்தாலும், அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சின் கண்டுபிடிப்பிற்குப் பிறகே பெருவெடிப்புக் கோட்பாடு ஏற்கப்பட்டு மற்றது தள்ளப்பட்டது. ஐன்ன்ஸ்டைனின் புலச் சமன்பாடுகளுக்கான செவ்வியல் தீர்வு ஓர் ஒருபடித்தான சமச்சீர்மை அண்டம் ஆகும். இது பிரீடுமேன்-இலாமைத்ரே-இராபெட்சன்-வாக்கர் வெளி என இப்போது அழைக்கப்படுகிறது. பிரீடுமேனுக்குப் பிறகே மற்ற மூவரும் 1920களிலும் 1930களிலும் இந்தச் சிக்கலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தனித்தனியாக இதே தீர்வைக் கண்டடைந்தனர். பொது சார்புடைமையைத் தவிர, நீரியங்கியலிலும், வானிலையியலிலும் அவருக்கு ஆர்வமிருந்தது.

விரிவடையும் அண்டக் கோட்பாட்டுக்கான சமன்பாடுகளுக்காகப் பெயர் பெற்ற அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன், செப்டம்பர் 16, 1925ல் தனது 37வது அகவையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் என்புருக்கிக் காய்ச்சலில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது நினைவாக நிலாவின் எரிமலைவாய் ஒன்று பிரீடுமேன் எரிமலைவாய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அலெக்சாந்தர் பிரீடுமேனின் பன்னாடுக் கருத்தரங்கம் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து நிகழும் அறிவியல் நிகழ்ச்சியாகும். இதன் நோக்கம், சார்பியல், ஈர்ப்பு, அண்டவியல், மேலும் இவைசார்ந்த புலங்களில் பணிபுரியும் அறிவியலார்களிடையே தொடர்பை ஏற்ப்டுத்துவதே ஆகும். முதல் ஈர்ப்பு, அண்டவியல் சார்ந்த இக்கருத்தரங்கம் அவரது நூற்றாண்டு நினைவாக 1988ல் நடந்தது.


- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் … Read more
- கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி … Read more
- ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள … Read more
- நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்…மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.அந்த அரசன் சகல … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 261: அருளிலர் வாழி தோழி! மின்னு வசிபுஇருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடுவெஞ் … Read more
- குறள் 538:புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். பொருள் (மு.வ): சான்றோர் புகழ்ந்து சொல்லியச் … Read more
- பிஜேபியுடன் கூட்டணி முறிவு… அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்சசியை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்..,பி.ஜே.பியுடன் கூட்டணி முறித்துக் கொண்டதற்காக சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இஸ்லாமியர்கள் இனிப்பு ஊட்டி … Read more
- வாடிப்பட்டி அருகே மத்திய சிறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்..!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள … Read more
- கழிவுநீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகரட்சி அதிகாரி கைது..!தொடர்ந்து இதுகுறித்து பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் விஜயகுமார் கணேசன் … Read more
- சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் … Read more
- குளச்சல் படகு மூழ்கி மூன்று குமரி மீனவர்கள் மாயம்..!மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆள் கடல் பகுதியில் 29. 9. 2023 அன்று மீன் … Read more
- விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் கண்காட்சி..!விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகிறதுவிழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி … Read more
- அக்.1 முதல் விருதுநகர் – தென்காசி இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!
