தேனி மாவட்டம் குச்சனூர் கு.துரைச்சாமிபுரம் பகுதியில் முத்தையா துவக்கப்பள்ளியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

மேலும் குச்சனூர் பேரூர் இணை செயலாளர் பிரபாகரன் வார்டு செயலாளர்கள் முத்துவீரன்,முத்துச்செல்வம் மற்றும் கழக கிளை உறுப்பினர்கள் பாண்டீஸ்வரன், முருகன், சசிக்குமார் கலந்து கொண்டு குழந்தைகள் பயிலுவதற்கு வாய்ப்பாடு மற்றும் பேனா,பென்சில், நோட்புக் வழங்கினார்கள். வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கும் சர்க்கரை பொங்கல் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.





