• Sat. Apr 20th, 2024

2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் பள்ளி மஞ்சூரில் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் பெருமளவிலான மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏடிஎம் இயந்திரம் முதல் க்ளினோமீட்டர் வரையிலான கணித மாதிரிகள் கண்காட்சிகளில் இடம்பெற்றிருந்தது. 6 ஆம் வகுப்பு மாணவி வைசவி மாதி செய்திருந்த ஏடிஎம் மாடல். ஒரு கார்டைச் செருகியபோது நாணயங்களை விழச் செய்து கொண்டிருந்தார். மேலும் மாணவர்கள் கார்டு மேஜிக் செய்து பார்வையாளர்களை கவர்ந்தனர். கணிதத்தில் புதிர்கள் மற்றும் நுணுக்கங்கள் கண்காட்சியின் ஒரு பகுதியாக இருந்தன. மாணவர்கள் சரியான பதில்களுக்கு சாக்லேட்டுகளை வழங்குவதன் மூலம் பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தினர்.

7வது வகுப்பு மாணவி ஸ்ருதி செய்யப்பட்ட பிதாகோரஸ் தேற்றம் மாதிரியானது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.இந்த கண்காட்சியில் முழுக்க மாணவர்களுடைய கணித பாட புத்தகங்களிருந்து பாடங்களுக்கு ஏற்றவாறு வீட்டிலிருந்த பொருட்களைக் கொண்டு கணித மாதிரிகளை செய்து அசத்தி இருந்தனர். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் பாபி அவர்கள் மாணவர்களின் படைப்புகள் மிகவும் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர்.மற்ற ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினர். கண்காட்சிகான ஏற்பாடுகளை கணித ஆசிரியர்கள் அனிடாஎஸ்ரா மற்றும் சர்மிளா செய்திருந்தனர்.
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் சிறந்து விளங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *