• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் மாபெரும் இரத்ததான முகாம்..,

ByK Kaliraj

May 11, 2025

விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் அண்ணா தொழிற்சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.K.ரவிச்சந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கழக அம்மா பேரவை இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான
ராஜவர்மன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது.

இரத்ததானம் செய்த அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கபட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள்,நகர,ஒன்றிய,கழக செயலாளர்கள்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,நகர,ஒன்றிய,கிளை,வார்டு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி செய்திருந்தார்.