மானாமதுரை ஆர்.சி சர்ச்சில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து சர்ப்ரைஸ் கொடுத்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆர்.சி., சர்ச்சில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை பாஸ்டின் தலைமையில் நடந்தது இதையடுத்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் குடில் திறக்கப்பட்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கப்பட்டது தொடர்ந்து சர்ச்சில் இருந்த அனைவரும் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர் அப்போது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் கிறிஸ்மஸ் தாத்தா வேடமடைந்து வந்து அங்கிருந்த மக்களுக்கும் குழந்தைகளுக்கும் கேக் மற்றும் இணைப்புகளை வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.பின்னர் அவருடன் அனைவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.