• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கூட்டு நிதி திரட்டலை மேம்படுத்த, மிலாப்உடன் ஒன்றிணையும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை..,

Byகுமார்

Sep 14, 2023

தனிநபர்கள் மற்றும் சமூக காரணங்களுக்காக இந்தியாவின் முதல் பூஜ்ஜியக் கட்டண கூட்டு நிதிதிரட்டல் தளமான மிலாப் ஆனது, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து கூட்டு நிதிசேர்க்கையானது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
மிலாப் நிறுவனத்தின் தலைவரும் இணை நிறுவனருமான அனோஜ் விஸ்வநாதன் பேசும்போது,“ உயிருக்கு ஆபத்தான மருத்துவ நோய்களின் போது, நோயாளி மட்டுமல்ல, முழு குடும்பமும் பாதிக்கப்படுகின்றனர். சிகிச்சைக்கான அதிகப்படியான மருத்துவச் செலவுகள் இந்த அதிர்ச்சிகரமான கட்டத்தைச் சேர்க்கின்றன. இருப்பினும், தனியாக கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. க்ரவுட்ஃபண்டிங் முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இப்படியான குடும்பங்களை இணைக்கின்றன. அவர்கள் தங்கள் ஆதரவை வழங்கவும், வலிமிகுந்த சூழ்நிலையை எளிதாக்க நிதி உதவி வழங்கவும் தயாராக உள்ளனர்” என்றார்.
மதுரை போன்ற அடுக்கு-2 நகரங்களில் சமூக கட்டமைப்பு, ஆதரவைத் திரட்டுதல் மற்றும் மக்களுக்குத் தேவைப்படும் காலங்களில் உதவுதல் ஆகிய இந்தக் கருத்துக்கள் பெருமளவில் ஏற்றுக்கொண்டுள்ளன.
சரிபார்த்தல், அப்டேட்டுகளை பெறுதல் மற்றும் நிதிகளை மாற்றுதல் ஆகிய நோக்கங்களுக்காக, மிலாப் தமிழ்நாடு முழுவதும் உள்ள 46 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் இணைந்து பணிபுரிகிறது மற்றும் மதுரையில் உள்ள பல மருத்துவமனைகளுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. மிலாப் தளத்திலிருக்கும் 85%க்கும் அதிகமான நிதி திரட்டுபவர்கள் மருத்துவ மற்றும் தொடர்புடைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.
மிலாப்பின் நன்கொடையாளர்களின் உதவியானது உலகம் முழுவதிலும் உள்ள 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகிறது, மேலும் இந்தியா முழுவதும் 809,000+ திட்டங்களுக்கு ரூ.2300 கோடிக்கு மேல் பங்களித்துள்ளது.கடந்த 13 ஆண்டுகளில், இந்தியாவில் மக்கள் தங்கள் நேசத்துக்குரிய காரணங்களுக்காக நிதி திரட்டவும் பங்களிக்கவும் விரும்பும் தளமாக மிலாப் மாறியுள்ளது.