மதுரையில் நாம் தமிழர் கட்சியினர் தக்கலை நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய தலைவரை படுகொலை செய்த திமுக குண்டர்களை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் தக்கலை நாம் தமிழர் கட்சியில் ஒன்றிய தலைவர் சேவியர் குமாரை படுகொலை செய்த திமுக தொண்டர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன் தலைமையிலும் கிழக்கு மண்டல செயலாளர் அப்பாஸ் மேற்கு மண்டல செயலாளர் சிவானந்தம் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் படுகொலை செய்ததிமுக குண்டர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைத்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.