• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்த மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் இன்று காலை தனது வீட்டிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள் அனைவருமே வாரந்தோறும் புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு சைக்கிள் அல்லது பொதுப்போக்குவரத்தில் வர வேண்டும் என்று ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்திருந்தார். அதற்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் ஆட்சியர் அனீஷ் சேகர் இன்று அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தார். ஆட்சியர் அனீஸ் சேகரின் இந்த பசுமை முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், அரசு ஊழியர்கள் ஆட்சியர் வேண்டுகோளை ஏற்று இன்று புதன்கிழமை பொதுபோக்குவரத்து அல்லது சைக்கிளில் அலுவலகம் வருவார்களா?