உக்ரைனில் போரினால் சிக்கி, மேலூர் வந்தடைந்த மருத்துவ மாணவி யாஷிகா தேவியை பத்திரப் பதிவுத் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்..
மதுரை மாவட்டம் மேலூர் கருத்தபுலியம்பட்டியை சேர்ந்த மருத்துவ மாணவி யாஷிகாதேவி உக்ரைன் நாட்டில் கார்க்யூ பகுதியில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.
இந்நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக தமிழக மாணவர்கள் உட்பட பல இந்தியர்கள் உக்ரேனில் சிக்கித் தவித்தனர்.
உக்ரேனில் சிக்கியிருந்த இந்திய மாணவ மாணவிகளை மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து மாணவ, மாணவிகளை மீட்டு வருகின்ற நிலையில் , உக்ரேனில் சிக்கி தவித்த மருத்துவ மாணவி யாஷிகா தேவியை பாதுகாப்புடன் மீட்டுத்தர வேண்டும் என மாணவியின் குடும்பத்தினர் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட மாணவியின் குடும்பத்தினரிடம் கடந்த 22 ஆம் தேதி வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறிய அமைச்சர் பி.மூர்த்தி மாணவியை மீட்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய , மாநில அரசு முயற்சியால் மாணவி மீட்கப்பட்டு சொந்த ஊரான மேலூர் கருத்தப்புளியன்பட்டிக்கு திரும்பியதை தொடர்ந்து மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரை வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் உக்ரைன் நாட்டில் உள்ள நிலவரம் குறித்தும் அங்கு சிக்கியுள்ள மற்ற மாணவர்கள் குறித்தும் கேட்டறிந்தவர், மாணவி யாஷிகாதேவியை எல்லாவற்றையும் மறந்து தைரியமாக இருக்கும்படி ஊக்கப்படுத்தியதுடன்.
யாஷிகாதேவி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பல தமிழ் மாணவர்கள் இங்கே மருத்துவம் படிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கையை எடுகிகும் என அமைச்சர் மாணவியிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் நேருபாண்டியன், நகராட்சி சேர்மன் முகமது யாசின், முன்னாள் யூனியன் சேர்மன் செல்வராஜ், அ.வல்லாளபட்டி சேர்மன் குமரன் , ஒன்றிய செயலாளர்கள் ராஜராஜன் , கிருஷ்ணமூர்த்தி , நாவினிபட்டி வேலாயுதம் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சிந்தனைத் துளிகள்• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன […]
- பொது அறிவு வினா விடைகள்1.அரபிக் கடலின் அரசி?கொச்சி2.அதிகாலை அமைதி நாடு?கொரியா3.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்4.புனித பூமி?பாலஸ்தீனம்5.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்6.மரகதத் தீவு?அயர்லாந்து7.தடுக்கப்பட்ட நகரம்?லாசா8.பண்பாடுகளின் […]
- குறள் 210:அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். பொருள் (மு.வ): ஒருவன் தவறான நெறியில் சென்று […]
- திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்து – பொதுமக்கள் அவதிசாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்து- பொதுமக்கள் உதவியுடன் தள்ளி சாலையின் ஓரத்திற்கு கொண்டு […]
- பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வுபொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பி.இ, […]
- தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் ஓரிரு […]
- வாட் வரியை குறைக்க சொல்வதில் நியாமில்லை -பழனிவேல் தியாகராஜன்மாநிலஅரசுகளை வாட்வரியை மத்திய அரசு இப்போது குறைக்க சொல்வது நியாயமில்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு.பெட்ரோல், […]
- பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு -காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்கோவில்பட்டியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.முன்னாள் […]
- பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு -ப.சிதம்பரம் கருத்துபெட்ரோல் விலையை ரூ10 உயர்த்திவிட்டு ரூ9.50 குறைத்திருப்பது கொள்ளை அடிப்பதற்கு சமம்என ப.சிதம்பரம் கருத்துதெரிவித்துள்ளார்.மத்திய அரசு […]
- பெட்ரோல், டீசல் விலை குறைப்புசென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவும் […]
- 2024 தேர்தலையொட்டி மொழி சர்சையை கிளப்புகிறார் மோடி -கே.பாலகிருஷ்ணன் பேட்டிபிரதமர் மோடி 2024 தேர்தலையொட்டி மொழியை பயன்படுத்தி சர்சையை கிளப்புகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் […]
- இந்து சமய அறநிலைத்துறை உடனடி வேலை! சம்பளம் 26,600 முதல் 75,900 வரை.., உடனே அப்பிளே பண்ணுங்க!டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு மூலமாக கோயில் நிர்வாக அதிகாரியாக இளைஞர்களுக்கு ஒர் அருமையான வாய்ப்பு.10வகுப்பு, […]
- பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய கோரிக்கைசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்யக்கோரி சாத்தூரில் தேசிய சிறு ரக தீப்பெட்டி உற்பத்தியாளர் […]
- அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்- பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை […]
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]