உக்ரைனில் போரினால் சிக்கி, மேலூர் வந்தடைந்த மருத்துவ மாணவி யாஷிகா தேவியை பத்திரப் பதிவுத் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்..
மதுரை மாவட்டம் மேலூர் கருத்தபுலியம்பட்டியை சேர்ந்த மருத்துவ மாணவி யாஷிகாதேவி உக்ரைன் நாட்டில் கார்க்யூ பகுதியில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.
இந்நிலையில் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக தமிழக மாணவர்கள் உட்பட பல இந்தியர்கள் உக்ரேனில் சிக்கித் தவித்தனர்.
உக்ரேனில் சிக்கியிருந்த இந்திய மாணவ மாணவிகளை மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து மாணவ, மாணவிகளை மீட்டு வருகின்ற நிலையில் , உக்ரேனில் சிக்கி தவித்த மருத்துவ மாணவி யாஷிகா தேவியை பாதுகாப்புடன் மீட்டுத்தர வேண்டும் என மாணவியின் குடும்பத்தினர் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட மாணவியின் குடும்பத்தினரிடம் கடந்த 22 ஆம் தேதி வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறிய அமைச்சர் பி.மூர்த்தி மாணவியை மீட்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய , மாநில அரசு முயற்சியால் மாணவி மீட்கப்பட்டு சொந்த ஊரான மேலூர் கருத்தப்புளியன்பட்டிக்கு திரும்பியதை தொடர்ந்து மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரை வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் உக்ரைன் நாட்டில் உள்ள நிலவரம் குறித்தும் அங்கு சிக்கியுள்ள மற்ற மாணவர்கள் குறித்தும் கேட்டறிந்தவர், மாணவி யாஷிகாதேவியை எல்லாவற்றையும் மறந்து தைரியமாக இருக்கும்படி ஊக்கப்படுத்தியதுடன்.
யாஷிகாதேவி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பல தமிழ் மாணவர்கள் இங்கே மருத்துவம் படிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கையை எடுகிகும் என அமைச்சர் மாணவியிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் நேருபாண்டியன், நகராட்சி சேர்மன் முகமது யாசின், முன்னாள் யூனியன் சேர்மன் செல்வராஜ், அ.வல்லாளபட்டி சேர்மன் குமரன் , ஒன்றிய செயலாளர்கள் ராஜராஜன் , கிருஷ்ணமூர்த்தி , நாவினிபட்டி வேலாயுதம் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]