மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு போட்டி.! பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது., பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்
மதுரை மாவட்டம் சிலைமான் அருகேயுள்ள சக்குடி கிராமத்தில் தை மாதத்தில் நடைபெறக்கூடி உலக புகழ்பெற்ற 3 ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய சக்குடி ஸ்ரீமுப்புலிசுவாமி கோவில் உற்சவ ஜல்லிக்கட்டு போட்டியாக நடைபெறுகிறது., இதில்., 1000 ஜல்லிக்கட்டு காளைகள்., 630 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு 8 சுற்றுகளாக நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க கூடிய மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையானது அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெறுகிறது., மாடுபிடி வீரர்கள் ஏதேனும் போதை வஸ்துக்கள் உண்டார்களா.? அவர்கள் எடை, உயரம் அவர்களுக்கு உடலில் வேறு ஏதும் காயம் உள்ளதா என 20 மருத்துவர்கள் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
போட்டியின் போது காயம் ஏற்பட்டால் 6க்கும் மேற்பட்ட 108 அவசர சிகிச்சை ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது. அதே போல்., 1000 காளைகள் போட்டியில் பங்கேற்கும் காளைக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது., டோக்கன் வழங்கப்பட்ட மாடுகள் மற்றும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும்., போலியான டோக்கனுடன் வருகை தரும் நபர்களை தடுத்து நிறுத்த இந்த முறை காளைகளுக்கு வழங்கப்பட்ட டோக்கனுடம் 20 ரூபாய் தாலுடன் வழங்கப்பட்டுள்ளது. அந்த 20 ரூபாய் தால் காளைகள் பரிசோதனை செய்யும் இடத்திற்கு வரும்பொழுது மற்றொரு டோக்கன் வழங்கப்படுகிறது. அங்கு காளைகளுக்கு ஏதேனும் போதை வஸ்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளதா.? காளைகளின் உயரம், இரு கொம்புகளுக்கு இடையே உள்ள அளவு, காளைகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதலுடன் வருகை தரும் மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவ பரிசோதனையில் 25 மருத்துவர்கள் 65 மருத்துவ உதவியாளர்கள்., கொண்ட குழு உள்ளது தொடர்ந்து., போட்டியின் போது காளைகளுக்கு காயம் ஏற்பட்டால் ஒரு கால்நடை அவசர ஊர்தி தயார் நிலையில் உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 1000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவருடன் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் P.ராஜசேகருடன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சக்குடி ஸ்ரீமுப்புலிசுவாமி கோவில் காளை முதல் காளையாக ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டது.
- மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை […]
- ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது […]
- குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் […]
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சிநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் […]
- தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், […]
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]