• Sun. May 5th, 2024

யோகா பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்…

ByKalamegam Viswanathan

Jun 21, 2023

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் ஒன்பதாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர் .

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தலைமையில் யோக பயிற்சி செய்தனர்.

யோகா பயிற்சி மூலம் மனநலம் உடல் நலம் பாதுகாக்கவும் யோக பயிற்சி உதவும் யோகா பயிற்சியினை தொடர்ந்து செய்தால் மன அழுத்தம், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம் என பயிற்சியாளர் கூறினார்.

யோகப பயிற்சியில்மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 180 பேர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *