நற்றிணைப் பாடல் 84:
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,
திதலை அல்குலும் பல பாராட்டி,
நெருநலும் இவணர் மன்னே! இன்றே,
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம்,
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு,
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம்
ஏகுவர் என்ப, தாமே தம்வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே.
பாடியவர்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: பாலை
பொருள்:
தலைவியைப் பிரிந்து தலைவன் செல்வது எதற்கு? இரவலர்க்கு இல்லை என்று சொல்ல மனவலிமை இல்லாததால் அவர்களுக்கு உதவும் பொருளை ஈட்டிக்கொண்டு வரவே – இப்படித் தலைவியே தோழிக்குச் சொல்கிறாள்.
நேற்றும் அதற்கு முன்பும் என் கண், தோள், கூந்தல், திதலை வரி இருக்கும் அல்குல் ஆகியவற்றைப் பலபடப் பாராட்டிக்கொண்டு என்னுடன் அவர் இருந்தார். அந்தோ! (மன்னே!) இன்று கடத்தற்கு அரிய பாலைக்காட்டில் சென்றுகொண்டிருக்கிறார். அங்கே, கடல் போல் நீர் இருப்பது போல் தோற்றம் தரும் வெண்ணிறப் பேய்த்தேர் ஓடும். மரமே இல்லாத நீண்ட வெளி அது. அந்த வெளியில் மான் ஆசையோடு மேய்த்தேர் என்னும் மாயப் பொய்நீரை நாடி ஓடும்.
சில இடங்களில் தசும்பு என்னும் நீர்க்கசிவு இருக்கும். சுடுமண்ணில் அது கசிவதால் அந்த நீரும் சூடக இருக்கும். அது மத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் வெண்ணெய் போல் தோன்றும். அது பிறவா வெண்ணெய் நீர். வெயில் (உருப்பு) சுடுவதால் உவர்மண் சேற்றில் கசியும் நீர். ஓமை மரங்கள் மிகுந்திருக்கும் காடு அது. அங்கே அமர்ந்திருப்பதெல்லாம் வெயில் ஒன்றுதான். அதனால் வெப்ப அலை அங்கு வீசிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட காட்டில் அவர் சென்றுகொண்டிருப்பார் என்று சொல்கிறார்கள்.
எதற்காக இப்படிப்பட்ட காட்டில் அவர் செல்கிறார்? தம் இல்லத்துக்கு வந்து உதவும்படி யாராவது கேட்டால் அவரை இல்லை என்று சொல்லித் திருப்பி அனுப்ப மனவலிமை இல்லாதவர் அவர். வந்தவர்களுக்கு வழங்குவதற்காகப் பொருள் ஈட்டிவர அத்தகைய கொடிய காட்டில் செல்கிறார்.
- சேது – நிறைவேறாத நல்ல கனவாகவே இருக்கட்டும் ?சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் பொது வெளியின் பேசு பொருளாகவந்துள்ளது. உச்ச நீதி மன்றத்திற்கு இந்திய […]
- அழகின் அழகே குளிர்கால டிப்ஸ்..குளிர்காலத்திற்கான சிறந்த பராமரிப்பு குறிப்புகள் நீங்கள் வசிக்கும்இடம் மற்றும் ஆண்டின் எந்த மாதத்தை பொறுத்து குளிர்காலம் […]
- ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர்… அதிரடியாய் வெடித்த கே.டி.ராஜேந்திரபாலாஜிஅதிமுக நிறுவன தலைவர் தமிழர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் […]
- தை தெப்பத் ஏழாம் நாள் திருவிழா திருப்பரங்குன்றம் முருகனுக்கு தீப தூப ஆராதனைதை தெப்பத் திருவிழா ஏழாம்நாள் இன்று இரவு அருள்மிகு சுப்பிரமணியசாமிக்கும், தெய்வானைக்கும் தீபாராதனை நடைபெற்ற காட்சி
- அனுமதியின்றி மரக்கடத்தல்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரங்களை தொடர்ந்து அனுமதியின்றி […]
- அகில இந்திய மஜ்லிஸ் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு […]
- புதிய ஓய்வுதிய திட்ட எதிப்பு “கோரிக்கை மாநாடு” பிப்ரவரி 11ல் சென்னையில் நடக்கிறது.சென்னையில் நடைபெற உள்ள புதிய ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு கோரிக்கை மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 103:ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்சிறியிலை வேம்பின் பெரிய கொன்றுகடாஅம் செருக்கிய […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு குருவிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட […]
- குறள் 367:அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும். பொருள் (மு.வ):ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் […]
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]