

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
திருச்சி மண்டலம் – ரூ.42.59 கோடி, சேலம் மண்டலம் – ரூ.40.85 கோடி, கோவை மண்டலம் – ரூ.41.28 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் மதுகுடிப்போர் நேற்றே டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்கி குவித்தனர்.
