தேனி கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் லட்சுமணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கலெக்டர் பேசியதாவது:
தமிழகத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் பொருட்டு, இன்னுயிர் காப்போம் திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம் – நம்மைக்காக்கும் 48-என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கென தேனி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 6 அரசு மருத்துவமனைகள் மற்றும் 6 தனியார் மருத்துவமனைகள் என, மொத்தம் 12 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில், இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 நேரம் மிக முக்கியம் என்பதனை கருத்தில் கொண்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என, அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், சாலை விபத்துககளில் காயமடைந்தோர்களுக்கு முதல் 48 நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுதிக்கப்படும். இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து, மேலும் விபரங்கள் அறிய ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 104 குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயிர் காக்கும் சேவையினை அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]