• Wed. May 8th, 2024

குமரி,டெல்லி தேசிய மாணவ படையின் 13மாணவிகளின்இந்திய சுதந்திரத்தின் 75_வது ஆண்டின் கொண்டாட்ட சைக்கிள் பயணம்…

இந்திய சுதந்திரத்தின் 75_வது ஆண்டு கொண்டாட்டமாக. குஜராத்தை சேர்ந்த தேசிய படை மாணவிகளின். கன்னியாகுமரி_டெல்லி சைக்கிள் பயணத்தை கன்னியாகுமரி முக்கடல் சந்திப்பு பகுதியில் இருந்து 13_மாணவிகள் பங்கேற்ற, கன்னியாகுமரி_டெல்லி நோக்கிய மொத்தம் 3232 கிலோமீட்டர் பயணத்தின் முதல் கிலோமீட்டர் பயணத்தை காலம் சென்ற லெப்டினன்ட் ஆனந்தின் துணைவியர் திருமதி. பிரியங்கா நாயர் வாழ்த்தி பேசியதுடன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தேசிய மாணவர் படையின் குஜராத்தை சேர்ந்த மாணவிகள் கடந்த 6_மாத தொடர் பயிற்சிக்கு பின், இன்று(டிசம்பர்_08) இந்தியாவின் தென் கோடியில் இருந்து தலைநகர் டெல்லி நோக்கிய பெண் சக்தியின் ஆற்றல் பயணம் தொடங்கியது.

தேசிய மாணவர் படையினர் நாள் ஒன்றுக்கு 90_ கிலோமீட்டர் முதல் 95 கிலோமீட்டர் பயணம் பேற் கொண்டு, ஆங்கில புத்தாண்டின் ஜனவரி திங்கள் 24_ம் நாளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் தேசிய மாணவர் படையின் 13_மாணவிகளை வரவேற்க இருப்பதாக மேஜர் ஜெனரல் ரமேஷ் சண்முகம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *