கோடநாடு வழக்கில் பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன என காவல்துறை தரப்பில் விளக்கம்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள், புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன என்று காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளது. மேலும், வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, விசாரணையை விரைந்து முடிக்க கோரி குற்றம்சாட்டப்பட்ட மனோஜ் மனு செப்டம்பர் 16க்கு தள்ளி வைக்கப்பட்டது.