• Sun. Apr 2nd, 2023

கர்நாடக மாநில பேருந்து கன்னியாகுமரியில் விபத்து

கன்னியாகுமரிக்கு சுற்றுலாவந்த கர்நாடக மாநிலபேருந்து விபத்து ஏற்பட்டதில் மின்கம்பம் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுடன்,கன்னியாகுமரிக்கு வந்த தனியார் சுற்றுலா பேருந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி காவல் நிலையத்தின் அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு செல்லும் சாலையில் உள்ள வளைவில் பேருந்தின் மேல் பகுதி மோதியதில்.சிமென்டால் ஆன வளைவின் மேல் பகுதி பேருந்தின் மேல் சாய்ந்ததேடு பக்க தூணும் உடைந்து பக்க வாட்டில் சரிந்து நிற்கும் நிலையில் மின்சார கம்பமும் சரிந்துள்ளதால் அந்த பகுதியில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.சுற்றுலா பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *