அந்த காலகட்டத்தில் திருவிழாக்களிலும், பொருட்காட்சிகளிலும் திரை கட்டி படங்களை திரையிடுவது உண்டு. அப்படி திரையிடப்பட்ட படங்களில் அதிகமுறை திரையிடப்பட்டது கரகாட்டக்காரன் திரைப்படம் தான்.
தமிழ் சினிமாவில் அரசியல் கட்சிகளின் சின்னத்தை, கொடியின் வர்ணத்தை வைத்து பரப்புரை செய்யும் காட்சிகள் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கிறது. இரட்டை விரலை காட்டுவதும், உதயசூரியனைப்போல் ஐந்து விரல்களை காட்டுவதும், கருப்பு சிவப்பு உடையில் வருவதும், அதிமுக கொடியின் நிறத்தில் உடைகள் அணிவதும் தமிழ் சினிமாவில் சர்வசாதாரணம்.
ஆனால் அவற்றை எல்லாம் நடிகர்கள் தான் செய்வார்கள். முக்கியமாக படத்தின் நாயகன் தான் அது போன்ற கட்சி பரப்புரையில் ஈடுபடுவார். அந்த காட்சிகளுக்கு கைதட்டலும் விசிலும் பறக்கும். ஆனால் நடிகைகளும் அரிதாக இந்த கட்சி பரப்புரை வேலையை செய்திருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் கிடைக்காத கைதட்டலும், விசிலும் கனகாவின் கரகாட்டக்காரன் காஸ்ட்யூமுக்கு கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா.
1989-ல் கங்கைஅமரன் கரகாட்டக்காரன் படத்தை எடுக்கும்போது அதில் நாயகனாக நடித்த ராமராஜன் தமிழகமெங்கும் பிரபலமாகி இருந்தார். நடிகர் என்பதைத் தாண்டி அதிமுகவின் ஆத்மார்த்தமான தொண்டர் என்றவகையில் அவருக்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் இருந்தனர். எம்ஜிஆரின் வாரிசு என்று ராமராஜனின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு வண்டி கட்டிச் சென்று அவரைப் பார்த்து பரவசப்பட்டு மாலையும் சால்வையும் அணிவிக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அப்போது இருந்தார்கள். அடுத்த முதல்வர் ராமராஜன் என்ற கோஷம் அப்போது பிரபலம். தனது கலையுலக வாரிசு என்று எம்ஜிஆரே, பாக்யராஜை கைகாட்டி இருந்தாலும் அதிமுக தொண்டர்களுக்கு எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் கட்சியின் கலங்கரை விளக்கமாக திரையுலகில் இருந்தவர் ராமராஜன்.
பல்வேறு படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ராமராஜன் நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். அடர்த்தியான மீசை வைத்து அட்டகாசமாக அவரது அறிமுகம் அமைந்தது. படம் 100 நாள்கள் ஓடியது. இரண்டாவது மூன்றாவது படத்திலேயே தனது அடர்ந்த மீசையை எம்ஜிஆரை போல பென்சில் மீசையாக்கி, உதடுகளில் லிப்ஸ்டிக் பூசி அவரை பிரதி எடுக்க ஆரம்பித்தார். அதற்கு நல்ல பலனும் இருந்தது. கரகாட்டக்காரன் 1989-ல் வெளியானபோது ராமராஜன் ஸ்டார் நடிகராக இருந்தார். உடன் நடித்தது அதிமுக தொண்டர்கள், தலைவருடன் பார்த்து ரசித்த தேவிகாவின் மகள் கனகா.
அதிமுக தொண்டர்களின் உற்சாகத்திற்கு வேறு காரணம் வேண்டுமா என்ன? கரகாட்டக்காரன் படத்தின் எளிமையான கதையும், கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ காமெடி உள்ளிட்ட நகைச்சுவையும், கிராமத்து காதலும், இளையராஜாவின் கேட்டுச் சலிக்காத பாடல்களும் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கின.
ஆனால் ராமராஜன், கனகாவின் அறிமுகக் காட்சிகளைவிட அதிக கைத்தட்டல்களும், விசில் வரவேற்பும் கனகா இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்குதான் கிடைத்தது.
அதிமுக தொண்டர்களின் உற்சாகத்திற்கு வேறு காரணம் வேண்டுமா என்ன? கரகாட்டக்காரன் படத்தின் எளிமையான கதையும், கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ காமெடி உள்ளிட்ட நகைச்சுவையும், கிராமத்து காதலும், இளையராஜாவின் கேட்டுச் சலிக்காத பாடல்களும் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கின.
ஆனால் ராமராஜன், கனகாவின் அறிமுகக் காட்சிகளைவிட அதிக கைத்தட்டல்களும், விசில் வரவேற்பும் கனகா இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்குதான் கிடைத்தது.
மாங்குயிலே பூங்குயிலே பாடல் கரகாட்டக்காரன் படத்தில் இரண்டு முறை வரும். முதலில் ராமராஜன் தனது குழுவினருடன் ஆட, ஊர் மொத்தமும் கூடி நின்று வேடிக்கை பார்க்கும். முதல் முறையாக கனகாவும் அப்போதுதான் மறைந்திருந்து ராமராஜனை பார்ப்பார். அதன்பிறகு ராமராஜன், கனகாவின் டூயட் பாடலாக வரும். பாடலின் இரண்டாவது சரணம் பெண் குரலில், “மாமரத்துக் கீழே நின்னு மங்கை அவ பாட…” என்று ஆரம்பிக்கும் போது திரையரங்குகள் அதிரும். விசில் சத்தம் காதைப் பிளக்கும். திரை தெரியாதபடி பேப்பர்களும், பூக்களும் வாரி இறைக்கப்படும். சில திரையரங்குகளில் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. அந்த சரணம் முடியும்வரை தொண்டர்களின் ஆரவாரத்தில் திரையரங்குகள் பொடிபடும்.
அந்த சரணத்தின் போது கனகா கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற பாவாடை அணிந்திருப்பார். அதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்கள். விஷயம் தெரியாதவர்கள் எதற்கு திடீரென இந்த கொண்டாட்டம் என பேய்முழி முழித்ததும் நடந்திருக்கிறது. கங்கை அமரனும் இந்தக் காட்சியில் சோலோவாக கனகாவை காட்டி, கைத்தட்டலுக்கான ஸ்பேஸை ஏற்படுத்தி தந்திருப்பார். சுற்றிலும் பச்சை நிறத்தில் சூரியகாந்தி செடிகள் இருக்க, ராமராஜன் கனகாவை கையில் ஏந்தும் காட்சியை டாப் ஆங்கிளில் எடுத்து தொண்டர்களின் வெறியை அதிகப்படுத்தியிருப்பார். இதுபோன்ற வரவேற்பு ராமராஜன் அதிமுக கொடி நிறத்தில் உடை அணிந்து வந்த போதுகூட கிடைத்ததில்லை.

அந்த காலகட்டத்தில் திருவிழாக்களிலும், பொருட்காட்சிகளிலும் திரை கட்டி படங்களை திரையிடுவது உண்டு. அப்படி திரையிடப்பட்ட படங்களில் அதிகமுறை திரையிடப்பட்டது கரகாட்டக்காரன் திரைப்படம் தான். அப்பொழுது எல்லாம் இந்த காட்சி வருகையில் திருவிழாக்களும் பொருட்காட்களும் கிடுகிடுக்கும். ஒரு காலத்தில் அடுத்த முதலமைச்சர், அடுத்த எம்ஜிஆர் என்று கொண்டாடப்பட்ட ராமராஜன் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை. ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரவேற்ற கனகாவின் விலாசமும் தெரியவில்லை. சினிமா எப்போது யாரை உச்சத்தில் வைக்கும், எப்போது அடி ஆழத்தில் அழுத்தம் என்பது யாருக்கும் தெரியாது. இந்த இரு நிலைகளை கடந்து எப்போதும் திரையில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் ஒரு சிலர் தான். வளரும் நடிகர்கள் இந்த மாயையை மனதில் கொள்வது மிக அவசியம்.

- நாளை பாரத் பந்த்..??? வெளியான அறவிப்பு…ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் […]
- அப்பாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம்… நடிகர் சிம்பு ட்வீட்மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. […]
- கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்தேனி மாவட்டத்தில் கஞ்சாவிற்றவரின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்க உத்தரவுதேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டம் மயிலாடும்பாறைச் […]
- மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்தல்-அதிமுகவில் இழுபறிமாநிலங்களவை எம்.பி வேட்பாளர் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நீடித்திவருகிறது.பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில் […]
- மேயர்… வந்தார், நின்றார், சென்றார்… புஷ்ஷாகி
போன மக்கள் குறைதீர் கூட்டம். மனு அளிக்க வந்தவர்கள் ஏமாற்றம்.மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்சிறப்பு முகாமிற்கு வந்த மேயர் இடையிலேயே சென்றுவிட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.மதுரை மாநகராட்சி […] - பக்தர்கள் மீது தாக்குதல்-கோயில்அர்ச்சகர் அராஜகம்இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவில்( அர்ச்சகர் மாரிசாமியின் […]
- மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம்மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம் ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்த பொதுமக்கள்மதுரை மாநகராட்சி […]
- ஆபாச போஸ்டர்- மக்கள் நீதிமய்ய கட்சியினர் மீது வழக்குமதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற போஸ்டரால் மக்கள் நீதி மய்ய கட்சியினர் மீது இரண்டு காவல்நிலையங்களில் […]
- ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய் தான்…வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் […]
- உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவுக்கு புகழாரம்…சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு […]
- பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னை வருகைநாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் […]
- கோவில் விழாவில் ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… உயர்நீதிமன்ற மதுரை கிளைகோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை […]
- இலங்கையில் அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை உயர்வுஇலங்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்ந்துள்ளது.இலங்கையில் டாலரும் இல்லை,ரூபாயும் […]
- பலாக்கொட்டை பொடிமாஸ்தேவையானவை:பலாக்கொட்டை – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – […]
- 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் கோடை விழா2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சியை அமைச்சர் ஐ. பெரியசாமி […]