• Fri. Apr 19th, 2024

பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கபசுரக் குடிநீர்

Byமதன்

Jan 13, 2022

வேலூர் மாவட்ட மக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையரின் பரிந்துரையின் பேரிலும் மாநகராட்சி சார்பில் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மக்களுக்கும் கொடிய நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும், நோய் வராமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கபசுரக் குடிநீர் அனைவருக்கும் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தலின் பேரில் வழங்கப்பட்டது. இதில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணம் செய்தவர்கள் பருகி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *