• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு கபாடி போட்டி..,

ByKalamegam Viswanathan

May 24, 2025

திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் கபாடி போட்டியை துவக்கி வைத்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு ,ஆர் பி உதயகுமார் கபடி போட்டி நிகழ்ச்சிக்கு விழா அழைப்பிதழில் பெயர் இருந்தும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

50 அணிகள் பங்கு பெறும் 2 நாள் கபாடி போட்டிகளில் முதல் பரிசாக ரூபாய் 71 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பை , 2வது பரிசாக ரூபாய் 51 ஆயிரம் மற்றும் கோப்பை ,
3வது பரிசாக ரூபாய் 3 1ஆயிரம் மற்றும் சுழற் கோப்பை , 4 வது பரிசாக ரூபாய் 21 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பை வழங்கப்படுகிறது.

மேலும் கலந்து கொள்ளும் 5 முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் மற்றும் கேடயம் பரிசளிக்கப்படுகிறது.

கபாடி போட்டி விழாவினை திருப்பரங்குன்றம் எம்ஜிஆர் இளைஞரணி சார்பாக ராஜன் செல்லப்பா MLA துவக்கி வைத்தார். மதுரை கிழக்கு மாவட்ட MGR அணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து பரிசு வழங்குபவர்கள் என முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு உதயகுமார் பெயருக்கு போடப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் விழாவிற்கு வரவில்லை ஆனால் முன்னாள் அமைச்சர் சிவபதி கலந்து கொண்டு கபடி போட்டியினை துவக்கி வைத்தார்.