சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சௌரிபாளையம் பகுதியில் உள்ள புனித சவேரியார் பிரான்சிஸ் கிருஸ்துவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்த பொது மக்களிடம் தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம், ஆட்சி அமைத்தவுடன் அதிமுக அரசின் அனைத்து திட்டங்களையும், அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இந்நிகழ்சியில் தொகுதி பொறுப்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பகுதி பொறுப்பாளர் கணேஷ் குமார்,பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி, வட்ட கழக செயலாளர்கள் பாலு,பிரபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




