மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை நாளை தாக்கல்செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.மரணம் தொடர்பாக கடந்த 5 வருடங்களாக விசாரணை நடத்தி வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நாளை தாக்கல் செய்கிறது. அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளதால் அறிந்து கொள்ள இப்போதே தமிழக மக்களிடம் ஆர்வம் தொற்றிக்கொண்டுள்ளது. ஜெ.உடன் மருத்துவமனையில் இருந்த சசி.ஓபிஎஸ்,இபிஎஸ்.அப்போலோ மருத்துவர்கள் அளித்த வாக்குமூலம் இதில் இடம்பெற்றுள்ளது.