பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதால் யாருக்கு பயன்? என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களைசந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது.இப் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைவதால் பயன்பெறுபவர்கள் அதானி மற்றும் ஜீஸ்கொயர் நிறுவனம் மட்டுமே. அதானி தனிப்பட்ட முறையில் விமானநிலையம் கட்டினால் நாம் எதிர்ப்போம். ஆனால் அரசின் அதிகாரத்தை நம்மால் எதிர்க்க முடியாது என்பதால் அரசாங்கம் விமானநிலையம் கட்டி அதானி அதானிக்கு விற்கபோகிறது என கூறுயுள்ளார்.