• Sat. May 11th, 2024

வெற்றிகரமாக பிரமோஸ் ஏவுகணையை பரிசோதித்தது இந்தியா

Byகாயத்ரி

Jan 20, 2022

ஒடிசா கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தி பரிசோதித்தது இந்தியா.

பிரமோஸ் சூப்பர்சோனிக்கின் புதிய வகை ஏவுகணையை இந்தியா இன்று ஒடிசா மாநிலத்தின் பாலாசோரில் வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்தது.இந்த ஏவுகணையில் புதிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன, அவை வெற்றிகரமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை 400 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கியதாக சோதனையை நடத்திய மத்திய அரசின் DRDO அமைப்பு தெரிவித்துள்ளது. இச்சாதனைக்காக விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *