வேற்று கிரக வாசிகள் பற்றிய தகவல்கள் என்றாலே எப்போதும் நமக்கு சுவாரசியம் குறையாமல் அவற்றை அறிய முற்படுவோம்.
அந்த அளவிற்கு வேற்று கிரக வாசிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். மற்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்பதை பல கோணங்களில் ஆய்வு செய்து வந்துள்ளோம். இதுவரை நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தை கொண்டு இவற்றை ஆய்வு செய்து வந்திருக்கிறோம். ஆனால் நாம் எட்ட வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது.
அந்த வகையில், ஒரு வேளை வேற்று கிரக வாசிகள் இருப்பது உண்மையானால் மனிதர்கள் எப்படி அதற்கு எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதை அறிந்து கொள்ள நாசா விரும்புகிறது. மேலும் இதன்மூலம் மனிதர்களுக்கு கடவுள் மற்றும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய கண்ணோட்டம் வேறுபடலாம் என்பதாலும் இப்படியொரு ஏற்பாட்டை செய்ய உள்ளது. இந்நிலையில் நியூஜெர்சியில் இருக்கும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள இறையியல் விசாரணை மையத்தில் (Center for Theological Inquiry) 24 பாதிரியார்களை நியமித்துள்ளது. இதற்காக 2014 ஆம் ஆண்டே சுமார் $1.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாசா தரப்பில் வழங்கியுள்ளது.
மேலும் இந்த மையமானது இறையியலாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் ஆகியோரை இணைத்து ஒன்றாக சிந்திக்கும் வகையிலான மாநாட்டை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக குழப்பத்தில் இருக்க கூடிய சில கேள்விகளுக்கு விடை தரும் வகையில் இத்திட்டம் செயல்பட உள்ளது. உதாரணமாக “வாழ்க்கை என்றால் என்ன? உயிர் வாழ்வதற்கான அர்த்தம் என்ன? மனிதர்களும் வேற்று கிரகவாசிகளும் எந்த புள்ளியில் ஒன்று சேர்கின்றனர்? பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அறிந்து கொள்ளும் முயற்சியாக இந்த திட்டம் அமைய உள்ளது.
நாசா தற்போது, செவ்வாய் கிரகத்தில் இரண்டு ரோவர்களையும், வியாழன் மற்றும் சனி கிரகத்தை சுற்றி வரும் பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன், நட்சத்திரம் மற்றும் கிரகங்களின் உருவாக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பையும் நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது. மேலும் பூமிக்கு வெளியே உள்ள உயிர்களைக் கண்டறியும் நம்பிக்கையில் நாசா உள்ளது.
நாசா நியமித்த இந்த 24 பாதிரியார்களில் ஒருவராக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மத அறிஞரான பாதிரியார் டாக்டர் ஆண்ட்ரூ டேவிசன் இடம்பெறுள்ளார். மேலும் இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் எழுதிய புத்தகம் ஒன்று அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதற்கு ‘வானுயிரியல் மற்றும் கிறிஸ்தவ கோட்பாடு’ (Astrobiology and Christian Doctrine) என்று பெயரிடப்பட்டுள்ளது.
வேற்றுகிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதில் மத மரபுகள் முக்கிய அம்சமாக இருக்கும். மேலும் இத்திட்டத்தின் மூலம், மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாம் நெருங்கி வருகிறோம் என்று பாதிரியார் ஆண்ட்ரூ குறிப்பிட்டுள்ளார்.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]