முன்னல்லாம், டூர் (சுற்றுலா) அப்படினாலே, மாதம் ஒரு முறை, இல்லன்னா வருடம் ஒரு முறை அப்படிங்குற பழக்கம் தான் இருந்தது.. ஆனா, இப்போ எப்படா இந்த வார இறுதி அப்டின்னு காத்திருந்து டூர் போகிற பழக்கம் வந்திடுச்சு..
அப்படியான டூர்ல்ல, முக்கிய பங்கு வகிக்கிற பல பரிமாணங்கள் உண்டு.. அதுல மிக முக்கியமானது உணவு.. இந்த உணவ ரசிக்குறதுல இரண்டு வகை உண்டு.. ஒன்னு எந்த ஊருக்கு போறோமோ அந்த ஊர் உணவுகள அலைஞ்சு திரிஞ்சு தேடி போய், சுவைச்சு பாக்குறது, இது முதல் வகை..
மற்றொரு வகை, வீட்டுலயே வாய்க்கு ருசியா சமைச்சு, அத போன இடத்துல அருவிக்கு பக்கத்திலயோ இல்ல மலை பிரேதசங்களோட அழக ரசிச்சிட்டே சாப்பிடற்து..
இந்த இரண்டாம் வகைக்கான குறிப்பு தான் இது.. பொதுவா கட்டுச்சோறு கட்டும்போது பிளாஸ்டிக் டப்பாக்கலயோ இல்ல இதர பாத்திரங்களயோ தான், அதிகமா பயன்படுத்துறாங்க.. இது உணவோட ருசிய குறைக்குறது மட்டும் இல்லாம உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிக்க கூடியது.. முக்கியமா பிளாஸ்டிக்.. உடலுக்கு மட்டும் இல்ல.. குப்பையா போற மண்ணுக்கும் கேடு விளைவிக்கக் கூடியது..
இதற்கான மாற்றுதான் வாழை இலை.. அதான் வாழை இலை கட்டுச்சோறு.. இத சரியான முறைல்ல எப்டி கட்டு சோறு கட்டுறது..
வாழை இலைய நல்ல சுத்தமா கழுவி, அத உணவுக்கு தேவையான அளவுக்கு வெட்டி வச்சுக்கனும்.. பிறகு, அதுமேல கொஞ்சமா நல்லெண்ணெய தடவி, லேசா தீயில்ல வாட்டி அந்த சூட்டிலயே, நம்ம செய்யுற உணவ வச்சு இறுக்கமா கட்டணும். போன இடத்தில, உணவ பிரிச்சு சாப்பிடும் போது நல்லெண்ண வாசத்தோட, அந்த உணவோட ருசியே தனியா இருக்கும்..
சாப்பிட்ட பிறகு, அத கீழ எறியுறது மூலமா, பூமிக்கு உரமாவோ இல்ல கால்நடைகளுக்கு உணவாகுமே தவிர, தீங்கு விளைவிக்காது..
பின் குறிப்பு:
இப்படி வாழை இலை கட்டு சோறு முறையில், ஒரு ஐடியா.. ஒரு பாத்திரத்தில நெய்ய லேசா சூடாக்கி அதுல இட்லி மிளகாய்ப் பொடிய சேர்த்து, லேசா கிளறி அதுல சூடான இட்லிய போட்டு ஒரு குலுக்கு குலுக்கி, வாழை இலைல்ல மடிச்சு, அத டூர் போன இடத்தில பிரிச்சு சாப்பிட்டா, நாலஞ்சு இட்லி சத்தம் இல்லாம உள்ள போகும்..
இது போலவே, புலி சாதம், கத்திரிக்காய் தொக்கு, லெமன் சாதம் இல்ல சாம்பார் சாதம், உருளை கிழங்கு வறுவல் .. இப்டி காம்பினேஷன் உணவுகளும் கொண்டு போலாம்.. டூர் ஞாபகங்கள் வரிசைல்ல உணவு சரி இல்லனா பெரிய குறையாக தெரியும்.. மறக்க முடியாத நினைவுகளாக மாற்ற இந்த கட்டு சோறு முறைய பின்பற்றலாமே.
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]