முன்னல்லாம், டூர் (சுற்றுலா) அப்படினாலே, மாதம் ஒரு முறை, இல்லன்னா வருடம் ஒரு முறை அப்படிங்குற பழக்கம் தான் இருந்தது.. ஆனா, இப்போ எப்படா இந்த வார இறுதி அப்டின்னு காத்திருந்து டூர் போகிற பழக்கம் வந்திடுச்சு..
அப்படியான டூர்ல்ல, முக்கிய பங்கு வகிக்கிற பல பரிமாணங்கள் உண்டு.. அதுல மிக முக்கியமானது உணவு.. இந்த உணவ ரசிக்குறதுல இரண்டு வகை உண்டு.. ஒன்னு எந்த ஊருக்கு போறோமோ அந்த ஊர் உணவுகள அலைஞ்சு திரிஞ்சு தேடி போய், சுவைச்சு பாக்குறது, இது முதல் வகை..
மற்றொரு வகை, வீட்டுலயே வாய்க்கு ருசியா சமைச்சு, அத போன இடத்துல அருவிக்கு பக்கத்திலயோ இல்ல மலை பிரேதசங்களோட அழக ரசிச்சிட்டே சாப்பிடற்து..
இந்த இரண்டாம் வகைக்கான குறிப்பு தான் இது.. பொதுவா கட்டுச்சோறு கட்டும்போது பிளாஸ்டிக் டப்பாக்கலயோ இல்ல இதர பாத்திரங்களயோ தான், அதிகமா பயன்படுத்துறாங்க.. இது உணவோட ருசிய குறைக்குறது மட்டும் இல்லாம உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிக்க கூடியது.. முக்கியமா பிளாஸ்டிக்.. உடலுக்கு மட்டும் இல்ல.. குப்பையா போற மண்ணுக்கும் கேடு விளைவிக்கக் கூடியது..
இதற்கான மாற்றுதான் வாழை இலை.. அதான் வாழை இலை கட்டுச்சோறு.. இத சரியான முறைல்ல எப்டி கட்டு சோறு கட்டுறது..
வாழை இலைய நல்ல சுத்தமா கழுவி, அத உணவுக்கு தேவையான அளவுக்கு வெட்டி வச்சுக்கனும்.. பிறகு, அதுமேல கொஞ்சமா நல்லெண்ணெய தடவி, லேசா தீயில்ல வாட்டி அந்த சூட்டிலயே, நம்ம செய்யுற உணவ வச்சு இறுக்கமா கட்டணும். போன இடத்தில, உணவ பிரிச்சு சாப்பிடும் போது நல்லெண்ண வாசத்தோட, அந்த உணவோட ருசியே தனியா இருக்கும்..
சாப்பிட்ட பிறகு, அத கீழ எறியுறது மூலமா, பூமிக்கு உரமாவோ இல்ல கால்நடைகளுக்கு உணவாகுமே தவிர, தீங்கு விளைவிக்காது..
பின் குறிப்பு:
இப்படி வாழை இலை கட்டு சோறு முறையில், ஒரு ஐடியா.. ஒரு பாத்திரத்தில நெய்ய லேசா சூடாக்கி அதுல இட்லி மிளகாய்ப் பொடிய சேர்த்து, லேசா கிளறி அதுல சூடான இட்லிய போட்டு ஒரு குலுக்கு குலுக்கி, வாழை இலைல்ல மடிச்சு, அத டூர் போன இடத்தில பிரிச்சு சாப்பிட்டா, நாலஞ்சு இட்லி சத்தம் இல்லாம உள்ள போகும்..
இது போலவே, புலி சாதம், கத்திரிக்காய் தொக்கு, லெமன் சாதம் இல்ல சாம்பார் சாதம், உருளை கிழங்கு வறுவல் .. இப்டி காம்பினேஷன் உணவுகளும் கொண்டு போலாம்.. டூர் ஞாபகங்கள் வரிசைல்ல உணவு சரி இல்லனா பெரிய குறையாக தெரியும்.. மறக்க முடியாத நினைவுகளாக மாற்ற இந்த கட்டு சோறு முறைய பின்பற்றலாமே.
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]
- புதிய கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை […]
- முகம் வெள்ளையாக:பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் […]
- மகிந்த ராஜபக்சேவிடம் 5 மணி நேரம் விசாரணை-கைதாக வாய்ப்பு?இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் ராஜபக்சேவிடம்5 மணி […]
- காலிஃப்ளவர் மசாலா:தேவையானவை :காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது […]
- பெட்ரோல் இல்லை, பணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டுவிட்பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் […]
- சிந்தனைத் துளிகள்• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. • தன் குற்றம் மறப்பதும் பிறர் […]
- பொது அறிவு வினா விடைகள்1.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?இங்கிலாந்து2.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?அமெரிக்கா, மலேசியா3.யுவான் […]
- குறள் 214:ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.பொருள் (மு.வ):ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் […]
- இந்திய மக்களைப் பிரிக்கும் வேலையை ஒவைசி செய்கிறார்- பாஜக தலைவர்ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி நாட்டை இந்திய மக்களை பிரித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். […]
- மனுஷனா இருந்ததுபோதும்… நாயாக மாறிய ஜப்பான் மனிதர்..ஜப்பானில் மனிதனாய் வாழ்வதை வெறுத்த நபர் ஒருவர் ஏகமாக செலவு செய்து நாய் உடை அணிந்து […]