

குமரி மாவட்டம் சகாயபுரம் பகுதியில் கோவில் கொண்டுள்ள இறை இயேசுவின் தாய்
இடைவிடா சகாய அன்னையின் தேவாலயம் அனைத்து மத மக்களும் வழி பட்டு அவர்கள் வேண்டுதல் நிறைவேறியதின் நன்றி காணிக்கை செலுத்து.ஒவ்வொரு புதன்கிழமையும், காலை முதல் முன் இரவு வரை சகாய அன்னையின் ஆலையத்துக்கு வந்து வழிபடுவது தொன்று தொட்டு தொடரும் ஒரு நன்றி செலுத்துவதின் அடையாளம்.

புனித இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா இன்று (மே9)மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.எதிர் வரும் மே18ம் தேதி வரை தொடர்கிறது.
திருக்கொடியேற்றும் நிகழ்வில் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர்
பேரருட்பணி ஜாண் ரூபஸ், அருட்பணி சாம் மேத்யூ, பங்கு அருட்பணியாளர்கள் ,அருட்சகோதரிகள், பங்கு அருட் பணிப்பேரவை, பங்கு மக்கள் கூடி
திருக்கொடியேற்றத்தை பக்தியுடன் தரிசித்தனர்.
