• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் சாரல் மழை..,

விருதுநகரில் சாரல் மழை. வடகிழக்கு பருவமழை காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.

மேலும் தூத்துக்குடியில் மழையின் காரணமாக நகர் முழுவதும் மழைநீர் தேங்கியது. ஆனால் விருதுநகரில் காலை 6 30 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது இது பற்றி விவசாயி ஒருவர் கூறுகையில் ” இந்த சாரல் மழையினால் தான் பூமி குளிர்ச்சி அடையும், மேலும் விவசாயிகளுக்கு நன்மை தரும் வகையில் உதவும்” என்று கூறினார்.