கடந்த மூன்று மாதங்களாக தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சனையால், ஒட்டுமொத்த தமிழகத்தையும் போராட்டக் களமாக மாற்றி இருக்கிறது .இது குறித்து முதல்வருக்கு விவரங்கள் நிச்சயமாக தெரிந்திருக்கும்.இரண்டு மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் எட்டு மணி நேரம் வரை நீடிக்கும் இந்த மின்வெட்டு மக்களுடைய இயல்பு வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டு சிதைத்து போட்டு இருக்கிறது.

தவெக ஆட்சி அமைந்த பிறகு தலைநகர் சென்னையில் லேசாக தலை தூக்கிய மின்வெட்டு பிரச்சனை, தற்போது தமிழக முழுவதும் தாண்டவம் ஆடி வருகிறது. மின்வெட்டு பிரச்சனை,மின் தடை என்பது இன்றைக்கு மக்களுடைய இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்திருப்பதை அறிவாரா முதல்வர் ? தினந்தோறும் இரவில் ஏற்படும் மின்வெட்டால் மக்கள் தீ பந்தங்களை கையிலே ஏந்தி, மின்சார அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்ற காட்சிகள் தினந்தோறும் தவறாமல் வந்து கொண்டு இருக்கிறோம்.
அதோடு வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும், கும்மிடிப்பூண்டியில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் அவர்களும், திருச்செந்தூரில் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களும் பேசிக் கொண்டிருக்கிற போது மின்சார துண்டிக்கப்பட்ட காட்சிகளும் இதற்கு சாட்சியாக இருக்கிறது .தமிழக முழுவதும் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது இந்த காட்சிகள்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆறுதல் கூற சென்ற இடத்திலே அவர் மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட காட்சிகளும், மின்வெட்டுக்கு எதிராக நடைபெற்று வரும் மக்களுடைய கோபத்திற்கு கிளர்ச்சிக்கும் போராட்டங்களுக்கும் இந்த காட்சிகள் எல்லாம் சாட்சியாக அமைந்திருக்கிறது

இதற்கெல்லாம் தீர்வு காணப்படவில்லை என்கிற கோபம் மக்களிடத்திலே கொந்தளித்து இருக்கிறது. மதுரை சுற்றியிருக்கிற கிராமங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 15 நிமிடம்மின்வெட்டு அதோடு இரவில் பல மணி நேரம்
மின்சாரத்தை தடை செய்வதால், மக்கள் தூக்கத்தை தொலைத்து தெருவில் நின்று போராடி வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சேலம்,திருவள்ளூர் சென்னை என்று தமிழகம் முழுவதும் இருக்கின்ற மின்வெட்டு குறித்து முதல்வர் மின்சார துறை அமைச்சருக்கு உரிய அறிவுரை கொடுத்தாரா?
ஏனென்றால் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தமிழகத்தில்
மின்சார தட்டுப்பாடு இல்லை என்று சொல்வதைப் பார்க்கிறபோது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற வகையில் கூறியுள்ளார்.
அனைத்தையும் சரி செய்து விட்டோம் அதே சமயம் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று பஞ்சாபையும் பிற மாநிலங்களை எடுத்துக்காட்டுவது என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறுவது மின்தடையை நியாயப்படுத்துவதாக அமைந்திருக்கிறது தவிர தீர்வு காணவில்லை.
காற்றாலை மின்சாரம் குறைந்தது தான் காரணம் என மின்வெட்டை நியாயப்படுத்துவது போல அவர் காட்டுகின்ற அக்கறை மின்வெட்டுக்கு தீர்வு காண்பதில்லை அக்கறை செலுத்தவில்லை என்பதுதான் நமக்கு புரிய வருகிறது.

பொதுவாக இந்த செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் காற்று குறைவாக இருக்கும் இதனால் காற்றாலை இருந்து நமக்கு தேவையான மின்சாரம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. மின்சாரம் இன்றைக்கு தேவை அதிகரித்து இருக்கிறது காரணம் வெப்ப சலனம் ஆகும் அதற்கு முன் எச்சரிக்கையாக கொள்முதலை நாம் தயார் நிலையில் வைத்துக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பை தவெக அரசு தவற விட்டது என்பது தான் மக்களின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது.
அதோடு சட்டசபையில் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுவதற்கு பதிலாக தவெகவும் ,திமுகவும் தங்கள் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தும் இடமாக சட்டசபையில் மாறி வருவதை நேரலையிலே பார்க்கின்ற மக்கள் இது ஆரோக்கியமான அரசியலாக தெரியவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றார்.
இந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்களும் சர்க்காரியா கமிஷன் கூறிய ஊழல் வழக்குகளை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும், அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்
இப்போது இருக்கிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொன்னான நேரத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கும் ,இப்போதுள்ள தவெக அரசால் அந்த வழக்குக்கு தண்டனை பெற்று தர முடியுமா? முடியாது என்பது முதல் விஜய் அவர்களுக்கு நன்றாக தெரிந்தும், அவர் நன்றாக புரிந்து இருக்கிறார்.
இது குறித்து சட்டசபையில் முதல்வரும் அமைச்சர்களும் பேசி என்ன பயம் மக்களுக்கு கிடைக்கப் போகிறது என்பதை கொஞ்சம் கூட சிந்தித்து பார்க்காமல் மக்கள் அறிந்த விஷயங்களை மீண்டும் பேசி பேசி சட்டசபையின் பொன்னான நேரத்தை வீணடித்து முதல்வர் யோசித்துப் பார்க்க வேண்டாமா என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது.
சட்டசபை என்பது தொகுதி மற்றும் மாநிலங்களுடைய வளர்ச்சி குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆரோக்கியமாக விவாதித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண நூற்றாண்டு காண்கிற சட்டமன்ற நமக்கு இருக்கிறது.

ஆனால் இப்போது சட்டமன்றம் மல்யுத்தம் மன்றமாக தவெக மாற்றி இருப்பதினால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்வுகளும், தீர்ப்புகளும், திட்டங்களும் ,சட்டங்களும் தடைபட்டு போகிறது தவிர வேறு என்ன பலன் மக்களுக்கு கிடைக்கப்போகிறது.
ஆகவே இன்றைக்கு அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டுக்கு நியாயம் கற்பிப்பிக்க நேரத்தை செலவிடாமல், இன்றைக்கு டெங்கு காய்ச்சல் காட்டுத்தீயாக பரவிக் கொண்டிருக்கிறது இதை வந்து எப்படி கட்டுப்படுத்த போகிறோம்.
கட்டுப்படுத்த தவறியதால் மக்களுக்கு உயிர் பலி ஏற்படுகிறது
இது குறித்து அமைச்சர் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைவோம் என அழைப்பு வடுத்துள்ளார் அனைவரும்மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் கொடுத்து இருக்கிறார். அதையெல்லாம் வரவேற்கிறோம்.
ஆனால் அரசு செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறிவிட்டது என்பதுதான் மக்களுக்கு இருக்கிற கோபம் இன்னைக்கு டெங்கு தடுப்பூசி கையிலே இருக்கிற போது அதை நாம் உடனடியாக மக்களுடைய பாதுகாப்புக்காக கொடுப்பதில்லை என்ன தயக்கம் இல்லை அரசுக்கு என்பதுதான் நமக்கு புரியவில்லை.
மொத்தத்தில் டெங்குகாய்ச்சல், மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றை சரி செய்வதில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது அரசு. மக்களை பாதுகாக்க அரசு அக்கறை செலுத்த வேண்டும் என கூறினார்.



