• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அழகின் அழகே….

ByMalathi kumanan

Nov 20, 2022

கூந்தல்  பொலிவு மற்றும் மனம் பெற

  1. மரிக்கொழுந்து இலையை மைய அரைத்து தேய்த்து தலை குளித்து வர கூந்தல் மணம் பெறும்.
  2. முருங்கை இலை மற்றும் கருவேப்பிலை சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்துவர கூந்தல் கருகருவென்று வளரும்.
  3. வாழைப்பழம், தயிர் இரண்டையும் மைய அரைத்து கூந்தலில் தேய்த்து வர கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
  4. எப்பொழுதும் ஷாம்பூ பயன்படுத்தும் பொழுது அதனுடன் சிறிது தயிர் கலந்து தேய்த்து வந்தால் முடி கொட்டுதல் கூந்தல் மிருதுவாக காணப்படும்.
  5. வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து அதனுடன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு இதனை நம் தலையில் சிறிது நேரம் தடவி ஊற வைத்து குளித்து வர வெப்பம் தணிந்து கூந்தல் பொலிவாகவும் மணமாகவும் இருக்கும்.