நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலே குறையாத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா ஒமைக்ரான் படையெடுத்துள்ளது.இதுவரை இந்த ஒமைக்ரான் குறித்த எந்த விடைகளும் இல்லை.ஆனால் இதன் வீரியம் டெல்டாவை விட பன் மடங்கு உயர்ந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.அந்த வகையில்தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒமைக்ரான் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1-8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும்.பள்ளிகளில் நீச்சல் குளங்கள் மூட வேண்டும்.இறைவணக்கம் கூட்டம், விளையாட்டு கலாசார நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.