குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 9_நிரந்தர உண்டியல்கள் நீங்கலாக 7_குடங்களும் உண்டியலுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்கள் 2_மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படும்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உண்டியல் இன்று காலை கோவில் ஊழியர்கள், தன்னார்வா அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் இணைந்து உண்டியல் பணத்தை எண்ணும் பணி தொடங்கியது.
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு, பக்த்தர்களின் காணிக்கை பணம் எண்ணும் பணி தொடங்கியது.