• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Dec 2, 2022
  1. சிரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வர் சிற்பம் எந்த மாநிலத்தில் உள்ளது?
    கர்நாடகா
  2. காளிதாசர் எழுதிய காவியம்
    குமாரசம்பவம்
  3. சமண மாநாடுகளில் “வல்லாபியில்” எத்தனையாவது மாநாடு நடைபெற்றது?
    இரண்டாவது
  4. திரிபீடகம் முதன்முதலில் நூல் வடிவில் எழுதப்பட்டதாக கூறும் நூல்
    மகாவம்சம்
  5. இராஜஸ்தானில் சமண கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக குறிப்பிடுவது
    தில்வாரா கோயில்
  6. தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரமான ஹரப்பா எனும் பகுதி அகழ்வு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
    1921
  7. பௌத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறை நூலின் உட்பிரிவு
    அபிதம்ம பீடகம்
  8. கனிஷ்கர் அவையில் அங்கம் வகித்த புத்த சமய அறிஞர்
    அசுவகோசர்
  9. ஹரப்பா நாகரிகத்தின் முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்ட காளிபங்கன் அமைந்துள்ள மாநிலம்
    ராஜஸ்தான்
  10. பின் வேதகாலங்களில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள்
    மைத்ரேயி