• Fri. Apr 19th, 2024

விநாயகர் சிலை ஊர்வலம்… பல்வேறு கட்டுப்பாடுகள்…

ByA.Tamilselvan

Aug 31, 2022

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சிலைகள் ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சிலை வைக்கவும் , ஊர்வலத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்போர் போதைப்பொருள் ,மதுபானங்களை உட்கொள்ளக்கூடாது, குறிப்பிட்ட அரசியல் கட்சி,சமூகம் ,சாதியை குறிப்பிட்டு நடனம், பாடல்கள் இசைக்ககூடாது, ஊர்வலத்தில் அசம்பாவிதம் நடந்தால் விழா ஏற்பாட்டாளர்களேபொறுப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை மீறினால் ஊர்வலத்தை நிறுத்த போலீசாருக்கு அதிகாரம் உண்டு என உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *