சுதந்திரப் போராட்ட தியாகி வ உ. சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன் பால ராஜேந்திரன் சோழவந்தான்
பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் அவைத் தலைவர் தீர்த்தம் என்ற ராமன் துணைத் தலைவர்கள் லதாகண்ணன் வாடிப்பட்டி கார்த்திக் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் சிபிஆர் சரவணன் பேரூராட்சி கவுன்சிலர்கள் சதீஷ் செல்வராணி மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் ராமநாதன்
முன்னாள் பேரூராட்சி தலைவர் ஐயப்பன் முள்ளி பள்ளம் கேபிள் ராஜா சங்கங்கோட்டை ரவி சந்திரன் கண்ணதாசன் செங்குட்டுவன் தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் இளைஞர் அணி பால் கண்ணன் எஸ் ஆர் சரவணன் மாரிமுத்து மகளிர் அணி சசிகலா சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.








