• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை..,

ByKalamegam Viswanathan

Sep 5, 2026

சுதந்திரப் போராட்ட தியாகி வ உ. சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் திருவேடகம் சி பி ஆர் மணி தலைமையில் பேரூர் செயலாளர் முருகேசன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சோழவந்தான் சிவா பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் முன்னாள் சேர்மன் முருகேசன் தென்கரை ராமலிங்கம் பிரேம் தியாகு சரத் மன்னாடி மங்கலம் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு 10வது வார்டு மணி ராமு 7வது வார்டு எஸ்பி மணி வழக்கறிஞர் காசிநாதன் மருது சேது 9வது வார்டு ஜீவா பெருமாள் ஜூஸ் கடை கென்னடி ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.