• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

ByK Kaliraj

Mar 9, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அம்மன் கோவில்பட்டியில் முத்தாலம்மன் கோவிலில் மாசி பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. முத்தாலம்மன் கோவில் கமிட்டியினர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பொங்கல் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை ஏற்று பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பெண்களின் முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.அதிமுக நிர்வாகிகள் மற்றும் முத்தாலம்மன் கோவில் விழா கமிட்டினர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.