பாரம்பரிய கைவினை மற்றும் நிலைத்தன்மை மிக்க ஆடை வடிவமைப்புக்காக அறியப்படும் சொகுசு ஆடை நிறுவனமான கையாரா (GAIARA), இந்தியாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புதிய உயர்தர ஆடைத் தொகுப்பான ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’வை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 28 மாநிலங்களின் பாரம்பரியக் கலை வடிவங்கள், எம்பிராய்டரி நுட்பங்கள் மற்றும் கலாசாரக் கதைகளில் இருந்து ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பு, பாரம்பரியத்தையும் நவீன ஆடை வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது. தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு வரும் கைவினைத் திறன்களை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு ஆடையும் தனித்துவமான வடிவமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கையாரா நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷா வர்தினி கூறியதாவது:
“இந்தியாவின் பாரம்பரியத்தையும், கைவினைக் கலைஞர்களின் பங்களிப்பையும் போற்றும் வகையில் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரியத்துக்கும் நவீன சொகுசு ஆடை வடிவமைப்புக்கும் இடையே பாலமாக இந்தத் தொகுப்பு அமையும். இந்தியாவின் வளமான கலாசார மரபை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன், அதன் உண்மைத்தன்மையையும் பாதுகாக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது” என்றார்.இந்த ஆடைத் தொகுப்பின் பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சி, ஊடகப் பிரபலமும் கலாசார தூதுவருமான அபர்ணா சுங்கு தலைமையில் நடைபெற்றது. இந்திய பாரம்பரியம் மற்றும் கதை சொல்லல் மீதான அவரது ஆர்வம், இந்தத் தொகுப்பின் நோக்கத்துடன் ஒத்துப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்புத் துறையினர், ஊடகப் பிரதிநிதிகள், கலாசார ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கையாரா நிறுவனத்தில் அன்றாட பயன்பாட்டிற்கான சாதாரண ஆடைகள், மணமகள் ஆடைகள், விடுமுறை மற்றும் சுற்றுலா பயணங்களுக்கு ஏற்ற ரிசார்ட் ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பெண்கள் ஆடைகள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. மேலும், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேக தனிப்பயன் (கஸ்டமைசேஷன்) வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரம்பரிய கைவினை நுட்பங்களையும் நவீன வடிவமைப்பு அணுகுமுறையையும் இணைக்கும் ‘உணர்வுப்பூர்வ சொகுசு’ என்ற கையாராவின் கொள்கையை இந்தத் தொகுப்பு பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கடந்த காலப் பாரம்பரியத்தை மதிப்பதோடு, எதிர்கால ஆடை வடிவமைப்பிற்கும் புதிய திசையை உருவாக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.

கோவையின் ஆர்.எஸ்.புரம் கிழக்கு பொன்னுரங்கம் சாலையில் செயல்பட்டு வரும் கையாரா நிறுவனம், உலகளாவிய பெண்களுக்கான நேர்த்தியான, நிலைத்தன்மை மிக்க மற்றும் கலாசார அடையாளங்களை பிரதிபலிக்கும் ஆடைகளை உருவாக்கி வருகிறது. இந்திய கைவினைத் திறன்களை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் தனது இலக்கை ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ தொகுப்பின் மூலம் மேலும் வலுப்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.




