பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் நினைவாக வழங்கப்படும் ரமோன் மகசேசே விருதை கேரளா முன்னாள் அமைச்சர் சைலஜா நிராகரித்துள்ளார்.
ரமோன்மகசேசே விருதை நிராகரித்தது பற்றி கேரள முன்னாள் அமைச்சர் சைலஜா விளக்கம அளித்திருக்கிறார்.”கொரோனா நேரத்தில் நான் செய்த பணி ஒரு கூட்டு முயற்சி அதற்காக நான் தனியாக விருது பெறுதல் முறையாகாது” என்று அவர் கூறியிருந்தார். ஆனால் பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன்மகசேசே,கம்யூனிஸ்ட்களை ஒடுக்கியவர் அதனால் அவ்விருதை சைலஜா ஏற்கவில்லை என மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.