அரசு பள்ளிகளில்பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வரும் ஜூன் 13 ம்தேதி அன்று கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தினை துவக்கி வைக்கிறார்.இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30000 ஆசிரியிர்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏற்கனவே வீடுதேடி கல்வித்திட்டம் செயல்படுத்தபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.